எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. 4 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.
பயிற்சி கிரிக்கெட்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 17–ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது.
இந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி ஆஸ்திரேலியா– இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இரு அணிகளிலும் 14 வீரர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டது.
வார்னர் 64 ரன்
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹில்டன் கார்ட்ரைட் (0) ரன் எதுவுமின்றி வெளியேறினாலும் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று வலுவூட்டினர். துணை கேப்டன் டேவிட் வார்னர் (64 ரன், 48 பந்து, 11 பவுண்டரி), கேப்டன் ஸ்டீவன் சுமித் (55 ரன், 68 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), டிராவிஸ் ஹெட் (65 ரன், 63 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அரைசதம் அடித்தனர். இதற்கிடையே அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் (14 ரன்) வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கிய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் இன்னொரு சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா ஆகியோரின் பந்து வீச்சுக்கு மட்டுமே ஆஸ்திரேலியர்கள் கொஞ்சம் தடுமாறினர். மற்றவர்களின் பவுலிங்கை சிரமமின்றி எதிர்கொண்டனர்.
ஆஸ்திரேலியா 347 ரன்
இறுதி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோனிசும், விக்கெட் கீப்பர் மேத்யூஸ் வேட்டும் அதிரடி காட்டினர். இதன் பலனாக கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலிய வீரர்கள் 101 ரன்களை திரட்டினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது.
ஸ்டோனிஸ் 76 ரன்களும் (60 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), மேத்யூ வேட் 45 ரன்களும் (24 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். கிரிக்கெட் வாரிய லெவன் அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், குஷாங் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் 8 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
லெவன் அணி தோல்வி
தொடர்ந்து களம் புகுந்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியில் திரிபாதி 7 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் அந்த அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் ஆஸ்திரேலியாவின் ‘மெகா’ ஸ்கோரை நெருங்க முடியவில்லை. எதிர்பார்க்கப்பட்ட ‘உள்ளூர் ஹீரோ’ வாஷிங்டன் சுந்தர் (11 ரன், 13 பந்து, 2 பவுண்டரி) பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். இதே போல் கேப்டன் குர்கீரத்சிங் மான் 27 ரன்களில் வீழ்ந்தார்.
முடிவில் வாரிய தலைவர் லெவன் அணி 48.2 ஓவர்களில் 244 ரன்களில் ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் 103 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 43 ரன்களும், மயங்க் அகர்வால் 42 ரன்களும், குஷாங் பட்டேல் 41 ரன்களும், அக்ஷய் கார்னிவர் 40 ரன்களும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தது. இதில் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளும், கனே ரிச்சர்ட்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் அரசு வசூலிக்க கூடாது: எடப்பாடி
28 Apr 2024சென்னை, கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் மே 13-ல் கப்பல் சேவை தொடக்கம்
28 Apr 2024சென்னை, சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் மீண்டும் மே 13 -ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கேரளாவில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
28 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் ஓட்டு போட வந்த இடத்தில் கோடை வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா துவங்கியது
28 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
-
விஜயகாந்திற்கு வரும் 9-ம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்படுகிறது : சென்னையில் பிரேமலதா பேட்டி
28 Apr 2024சென்னை, விஜயகாந்திற்கு வரும் 9-ந்தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா
28 Apr 2024புது டெல்லி, டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி நேற்று ராஜினாமா செய்தார்.
-
ஓரிரு நாளில் ரேபரேலி, அமேதி தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே தகவல்
28 Apr 2024கவுகாத்தி, ரேபரேலி, அமேதி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
-
ருத்ரதாண்டவம் ஆடிய வில் ஜேக்ஸ்: குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
28 Apr 2024அகமதாபாத், வில் ஜேக்ஸ், விராட் கோலி அபார பேட்டிங்கில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
2 லீக் ஆட்டங்கள்...
-
கம்போடியாவில் வெடிகுண்டு வெடித்ததில் 20 வீரர்கள் பலி
28 Apr 2024புனோம் பென், கம்போடியாவில் ராணுவ தளத்தில் வெடிகுண்டு வெடித்ததில், 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் நீதிபதி கடத்தல்
28 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் நீதிபதியை கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&nbs
-
சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு
28 Apr 2024கொழும்பு, சீனாவின் உதவியால் கட்டப்பட்ட இலங்கை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்தியா மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடம் வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
-
மத்தியல் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம்: ராகுல் காந்தி
28 Apr 2024புவனேஸ்வர், மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 புரட்சிகர பணிகளை செய்வோம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறினார்.
-
ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி. செயலிழந்த விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுறுத்தல்
28 Apr 2024கோவை, நீலகிரியில் ஸ்ட்ராங்ரூமில் சி.சி.டி.வி.
-
ராகுல் குறித்து சர்ச்சை கருத்து: கேரள கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு
28 Apr 2024பாலக்காடு, ராகுல்காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
-
கோடை வெயில் எதிரொலி: பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
28 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காய்கனிச் சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
-
வன்முறைக்கு 2 வீரர்கள் பலி: உறுதியான நடவடிக்கை எடுப்போம்: மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் உறுதி
28 Apr 2024இம்பால், சி.ஆர்.பி.எப்.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் குவியும் பக்தர்கள்: 18 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
28 Apr 2024திருப்பதி, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள், தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.