முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50ஆயிரம் உதவிதொகை-கலெக்டர்நடராஜன் வழங்கினார்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ரா மநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன்  பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன்பின்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து பரமக்குடி வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டகலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.   தொடர்ந்து, பரமக்குடி வைகை ஆற்றில் மூழ்கி  உயிரிழந்த பரமக்குடி நகரைச் சேர்ந்த  சுதர்சன் கிஷோர் என்பவரின் தந்தை சங்கரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50ஆயிரத்திற்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.
      இக்கூட்டத்தில்; சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள்,  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து