எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, டிச.- 8 - சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதற்கு எதிர்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது. ஒருமித்த கருத்து ஏற்படும் வரை இந்த திட்டத்தை கிடப்பில் போடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்திருந்தது. ஆனால் இந்த திட்டத்தால் உள்நாட்டு சில்லறை வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் பல கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று பாரதீய ஜனதா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் லோக் சபை, ராஜ்ய சபை ஆகிய இரு சபைகளுமே எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் முடங்கின. இந்த கட்சிகளை சமாதானப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. மேலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் மிகவும் ஆடிப்போன மத்திய அரசு இந்த முடிவை நிறுத்தி வைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நான்கு நாள் விடுமுறைக்கு பிறகு பாராளுமன்றம் நேற்று வழக்கம்போல் கூடியது. டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பாராளுமன்றத்தின் லோக் சபையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படும் வரையில் அனைத்து தரப்பினருடனும் கலந்து ஆலோசிக்கும் வரையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசு கிடப்பில் போடுவதாக அவர் தெரிவித்தார்.
இதே போல ராஜ்ய சபையிலும் இதேபோன்ற ஒரு அறிக்கையை மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா வெளியிட்டார். அரசியல் கட்சிகள் மற்றும் மாநில முதல்வர்களின் ஈடுபாடு இல்லாமல் இந்த முடிவை செயல்படுத்த முடியாது என்பதால் அவர்களுடன் ஆலோசனை நடத்தி அதன் பிறகு ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதுவரை இந்த முடிவை அரசு நிறுத்தி வைப்பதாகவும் பிரணாப் முகர்ஜி விளக்கினார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசு நிறுத்தி வைத்துள்ளதாக பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிவிப்புக்கு லோக் சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் வரவேற்று பேசினார்.
மக்களின் உணர்வுகளுக்கு இந்த அரசு தலைவணங்கி விட்டது. மக்களின் மன உறுதிக்கு முன்பாக அரசு தலை வணங்குவது தோல்வியாகாது என்று சுஷ்மா சுவராஜ் கூறினார்.
மத்திய நிதி அமைச்சரும் லோக் சபையின் அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜியின் அறிவிப்புக்கு பிறகு சபாநாயகர் மீராகுமார், பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த விஷயம் தொடர்பாக கொடுத்திருந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களையும் நிராகரித்தார்.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கோரி பா.ஜ.க. பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டு வந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
என்றாலும் கூட பிரணாப் முகர்ஜியின் அறிவிப்பால் திருப்தி அடையாத பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.க்கள் லோக் சபையிலிருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.
அதன் பிறகு லோக் சபையில் வழக்கமான கேள்வி நேரம் தொடங்கியது. கடந்த மாதம் 22-ம் தேதி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதற்கொண்டே இரு சபைகளிலும் எந்த விதமான அலுவல்களும் நடக்கவில்லை. அதன் பிறகு இப்போதுதான் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் முதன் முறையாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடந்த 9 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் சபை நடவடிக்கைகள் வழக்கம் போல் சுமூகமாக நடந்தன.
எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்து சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை கிடப்பில் போட அரசு முன் வந்தது எதிர்க்கட்சிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்18 hours 3 min ago |
ஸ்வீட் பால்.4 days 13 min ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 23 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்: விரைவில் விதிமுறைகளை வெளியிடுகிறது தமிழக அரசு
30 Apr 2024சென்னை : ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ் விண்ணப்பிக்க விதிமுறைகளை தமிழக அரசு விரைவில் வெளியிடுகிறது.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.