எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி,டிச.27 - ராமானுசன் போன்ற கணித மேதைகளின் சிந்தனைகளை எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். இந்தியாவின் கணித மேதை ராமானுசனின் 125-வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ராமானுசன் உயர் கணித மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக கவர்னர் ரோசய்யா தலைமை தாங்கினார். விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு உயர் கணித மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கணித மேதை ராமானுசத்தின் பெயரை தாங்கி இருக்கின்ற இவ்மையத்தை துவக்கி வைப்பதன் மூலம் அவருக்கு புகழஞ்சலி செலுவத்துவதில் பெருமை அடைகிறேன். தமிழகம் மற்றும் இந்தியாவினுடைய பெருமை மிகு திருமகனாக திகழும் ஸ்ரீநிவாச ராமானுசம், உலகம் தரமிக்க கணித மேதையாவார். வறுமையின் காரணமாக கணிதத்தில் அவர் குறைந்த பயிற்சியை பெற்றிருந்தபோதிலும் தனது தனித்திறமையின் காரணமாக கணித துறையில் அவர் புகழ் பெற்று விளங்கினார். ராமானுசத்தின் 125-வது பிறந்த நாள் விழாவை கொண்டாடிக்கொண்டியிருக்கும் இந்த வேலையில் அவருடைய பெயரில் இந்த உயர் கணித மையம் அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் மற்றொரு விழாவில் நான் கலந்துகொண்டு பேசும்போது ஒவ்வொரு ஆண்டும் ராமானுசத்தின் பிறந்த நாளை தேசிய கணித தினமாக அரசு கொண்டாட முடிவு செய்திருப்பதையும் 2012 முதல் அவருடைய பிறந்த நாள் கணித ஆண்டாக அனுசரிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அழகப்பா பல்கலைக்கழகம் தனது வெள்ளி விழாவை சென்றாண்டு கொண்டாடி முடித்திருப்பதாக அறிகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகள் புரிந்த இப்பல்கலைக்கழகத்தை வாழ்த்துகிறேன். இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர் பெருமக்களும் பல்வேறு விருதுகளை பெற்று பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்தில் இப்பல்கலைக்கழகம், தேசிய தர நிர்ணயக்குழுவின் மறுமதிப்பீட்டில் ஏ கிரேடு அந்தஸ்து பெற்றிருக்கிறது என்பதை அறிகிறேன். இதற்காக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு இனி வரும் காலங்களிலும் பல்கலைக்கழகம் மேலும் சிறப்பாக செயல்படும் என்று வாழ்த்துகிறேன்.
வள்ளல் அழகப்பா செட்டியாரின் கனவு நிறைவேறும் வகையில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டமான சிவகங்கையில் கலை, அறிவியல், பொறியியல், உடற்கல்வியியல் ஆகிய பல்வேறு வகையான கல்வி நிறுவனங்கள் அமைவதற்கு காரணமாக இருந்தவர் அழகப்பா செட்டியார் ஆவார். 1948-ம் ஆண்டு ராமானுசம் பெயரில் ஒரு கணித மையத்தை தொடங்க வேண்டும் என்பது அழகப்பா செட்டியாரின் கனவாக இருந்தது. தற்போது அது நினைவாகி உள்ளது. இத்தருணத்தில் நான் உங்களோடு சேர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கணிதவியலுக்கு நம்மாட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கடந்த காலங்களில் இத்துறையில் நம்நாடு மிகவும் சிறப்பு பெற்று விளங்கியது. இந்த பாரம்பரியத்தை ஊக்குவித்து வளர்ப்பது நமது கடைமையாகும். ஆர்யபட்டா, பிரமகுப்தா மற்றும் ராமானுசர் போன்ற மிகச்சிறந்த கணிதமேதைகளின் சிந்தனைகளை எதிர்காலத்தில் எடுத்துச்செல்வது நமது கடமையாகும். காரணம் என்னவெனில் கணிதம் பிற துறையை சேர்ந்த கல்வியினை பெறுவதற்கு மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்கிறது. நான் இன்று (நேற்று) காலையில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் இந்தியா சிறந்த கணித வல்லுனர்களை உருவாக்குவதில் பின்தங்கியுள்ளது என்று குறிப்பிட்டேன். ஆகவே மாணவர்கள் கணிதத்தை ஒரு முக்கிய பாடமாக கற்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இந்த மையம் நம்நாட்டின் இந்த பகுதியை சேர்ந்த மாணவர்களின் கணிதவியல் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
ராமானுசர் உயர் கணித மையத்திற்கான கட்டிடத்தை கட்டுவதற்கு தாராளமாக நிதியுதவி வழங்கிய இந்திய திட்டக்குழு உறுப்பினர் முனைவர் கஸ்தூரி ரங்கனை உளமார பாராட்டுகிறேன்.
அழகப்பா பல்கலைக்கழகமும் ராமானுசன் உயர் கணித கல்வி மையமும் சிறப்பாக வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், இந்திய திட்டக்குழு உறுப்பினர் முனைவர் கஸ்தூரி ரங்கன், பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு தலைவர் முனைவர் வேதப்பிரகாஷ், சுற்றலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்ட கலெக்டர் ராசாராமன், எம்.எல்.ஏ.க்கள் சோழன் பழனிசாமி, பெரியகருப்பன், துணைவேந்தர் சுடலைமுத்து, பதிவாளர் (பொறுப்பு) மணிமேகலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்1 day 22 hours ago |
ஸ்வீட் பால்.5 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளி கல்வித்துறையோடு இணைக்க அரசு நடவடிக்கை : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
01 May 2024சென்னை : கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளா
-
இ.வி.எம். வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றி இடி மின்னல் காரணமாக சி.சி.டி.வி-கள் செயலிழப்பு : தென்காசி மாவட்ட கலெக்டர் விளக்கம்
01 May 2024தென்காசி : வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையினால் சிசிடிவி கேமிராக்கள் செயல
-
வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டு
01 May 2024சென்னை : வெடிபொருள் விபத்துகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு இ.பி.எஸ். குற்றச்சாட்டியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்:ஆஸி., ஆப்கான் அணிகள் அறிவிப்பு
01 May 2024சிட்னி:டி-20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய, ஆப்கானிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்...
-
தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட 20 இடங்களில் வெயில் சதம்
01 May 2024சென்னை : உழைப்பாளர் நாளான நேற்று (மே.1) தமிழகத்தில் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியிதது.
-
ஐ.பி.எல். 48-வது லீக் ஆட்டம்:மும்பை வீழ்த்தியது லக்னோ
01 May 2024லக்னோ:ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
-
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம்
01 May 2024லக்னோ : அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
-
தேர்தலில் காங்கிரசுக்கு சரியான பதிலடியை நாடு அளித்தது : பிரதமர் மோடி பேச்சு
01 May 2024காந்திநகர் : டீக்கடைக்காரரால் நாட்டிற்கு என்ன செய்ய முடியும்?
-
ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தானம் அனுமதி
01 May 2024திருமலை : ஒரு கோடி முறை 'கோவிந்த கோடி' எழுதிய பெங்களூரு மாணவி வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க தேவஸ்தான அனுமதி வழங்கியுள்ளது.
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
தமிழ்நாட்டில் 2 நாட்கள் வெப்ப அலை தொடரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
01 May 2024சென்னை : தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
கேப்டன் பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மும்பை அணிக்கே அபராதம்
01 May 2024லக்னோ:பாண்ட்யாவுக்கு மட்டுமல்ல மொத்த மும்பை அணிக்கே ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விறுவிறுப்பாக...
-
அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
01 May 2024புதுடெல்லி : உ.பி.யின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் இம்முறை நேரு-காந்தி குடும்பத்தினர் போட்டியிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்கள் இன்று அறிவிக்
-
போதைப்பொருள் மாயம்: உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
01 May 2024புதுடில்லி : மத்திய அரசு பறிமுதல் செய்த, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 70,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் மாயம் என, வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
ரத்னம் விமர்சனம்
02 May 2024சட்டமன்ற உறுப்பினரான சமுத்திரக்கனியின் அரவணைப்பில் வளரும் விஷால், அவர் சொல்பவர்களை கொலை செய்வதையும், அவர் நடத்தும் மதுபானக் கூடத்தை பராமரிப்பதையும் வேலையாக செய்து வருகி
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
"டீப் பேக்" வீடியோ விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
02 May 2024புதுடில்லி : பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் சமூகவலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட டில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெ
-
எல்லை முழுவதும் பாதுகாப்பாக உள்ளது: ராஜ்நாத் சிங் மகிழ்ச்சி
02 May 2024பாட்னா : இந்தியாவின் எல்லை முழுவதுமாக பாதுகாப்பாக உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
இட ஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு ரகசியமாக பறித்து வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
02 May 2024புதுடில்லி : அரசுப் பணிகளை ஒழித்து தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.