எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் : இலவசங்கள் எதையும் வழங்காததால் உலகில் பல நாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளன’’ என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறினார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப மையத்தை மாணவர்களிடம் ஒப்படைத்தல் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமன விழா கடந்த திங்கட் கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியதாவது:
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் புதிய தொழில்நுட்ப கூடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எமக்கு பல அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு காண வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது. மனிதர்களை நேசிப்பதும் சிநேகமுடன் வாழ்வதும் ஏனையவர்களுக்கு உதவி புரிவதும் மனிதர்களிடம் காணப்பட வேண்டிய அடிப்படைப் பண்புகளாகும். அவை மனிதர்களுடைய பிரதான பொறுப்பும் கடமையுமாகும். நான் அந்தக் கொள்கையுடன் வாழ்வதனாலேயே இத்தகைய முக்கிய சந்தர்ப்பங்களில் பங்குகொள்கிறேன்.
இப்பாடசாலை 100 வருடங்களை விட பழைமையானது. இங்கு உரை நிகழ்த்தியவர்கள் இப்பாடசாலையில் சிங்கள மாணவர்கள் கூட கல்வி கற்றதாக குறிப்பிட்டார்கள். பாடசாலை என்பது கல்வியை கற்பிக்கும் இடமாகும். மொழி, இனம் அல்லது ஏனைய பேதங்களின்றியே கல்வி கற்பிக்கப்படல் வேண்டும். கல்வியை பெற்றுக்கொள்ளும் மாணவர்கள் தொடர்பில் எந்த வேறுபாடுகளும் காணப்படக் கூடாது. உலகின் எந்தவொரு நாட்டிலும் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு அந்நாட்டு மக்களுக்கு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுத்தல் அவசியமாகின்றது. கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அந்நாடுகளில் பிரச்சினைகள் குறைகின்றன.
எந்தவொரு நாட்டிலும் பொருளாதார, அரசியல் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் அதிகரிப்பதற்கு கற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தலும் ஒரு காரணமாகும். இப்பாடசாலையில் நீச்சல் குளம் இல்லை என்பதை அறிந்தேன். அதற்கு நான் உதவி வழங்க நினைக்கிறேன். அதற்கான திட்டத்தையும் மதிப்பீட்டையும் எனக்கு அனுப்பி வையுங்கள். கல்விக்கு நாம் முன்னுரிமை அளித்தல் வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டேன். அதில் 47 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அந்தந்த நாடுகளிலும் எமது நாட்டிலும் காணப்படும் கல்வி முறைகள் தொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம். எமது நாட்டில் முதலாம் தரத்திலிருந்து பல்கலைக்கழக கல்வி வரை இலவசக் கல்வி வழங்கப்படுகின்றது என்பதை நான் சுட்டிக் காட்டினேன். சில தலைவர்கள் தமது நாடுகளில் நான்கு வருடங்கள் இலவச கல்வி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்கள். சிலர் 8 வருடங்கள் இலவச கல்வியை வழங்குவதாகவும் மேலும் சிலர் 15 வயது வரை இலவசக் கல்வியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்கள். ஆனால் பெரும்பாலான நாடுகள் பல்கலைக்கழக கல்வியை இலவசமாக வழங்குவதில்லை எனவே குறிப்பிட்டார்கள்.
சீனா ஒரு வளர்ச்சியடைந்த நாடாகும். ஆனால் சீன பல்கலைக்கழகங்களில் இலவசக் கல்வி வழங்கப்படுவதில்லை. எமது அரசாங்கம் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் வழங்குகின்றது. ஏழைகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. அரசு நட்டம் அடைந்தாலும் மக்களுக்கு சேவையாற்றுகின்றது. பல உலக நாடுகள் சகல விசயங்களையும் இலவசமாக வழங்காத காரணத்தினாலேயே அவை வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் அப்படி நடைபெறுகின்றதென்பதனால் நாம் இலவசமாக வழங்கும் எதனையும் கட்டுப்படுத்தப் போவதில்லை. தொடர்ந்தும் வழங்குவோம்.
இன்று நாட்டில் வேலையற்ற பட்டதாரிகள் பெரும்பாலானோர் உள்ளனர். பெரும்பாலும் அவர்கள் அரச வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்துகின்றனர். அவ்வாறு ஈடுபடுவதற்கு அவர்களது தவறு ஏதும் காரணமல்ல. அவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி முறையிலேயே தவறு காணப்படுகின்றது. புதிய கல்விக் கொள்கைகள் மற்றும் திட்டங்களினூடாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நிலைமையை நாம் மாற்றி அமைப்போம். கடந்த வாரம் ஜப்பான் சென்றபோது அந்நாட்டு பிரதமருடனும் பேசினேன். நமது பட்டதாரிகளுக்கு ஜப்பானில் சிறந்த வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்பதை அப்போது அறிந்து கொண்டேன்.
அவர்களுக்கு தொழில்நுட்ப பட்டதாரிகள் முக்கியமாக தேவைப்படுகின்றனர். எமது நாட்டின் தொழில்நுட்ப பட்டதாரிகளுக்கு ஜப்பானில் சிறந்த வேலைவாய்ப்பு உள்ளது. நான் அது தொடர்பாகவும் கலந்துரையாடினேன். ஆகையினால் எமது கல்விக் கொள்கைகளை உருவாக்குகையில் தொழில்நுட்ப பாடங்களையும் விஞ்ஞான பாடங்களையும் தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய பாடங்களையும் பயில நாம் முதலிடம் அளிக்க வேண்டும்.
நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது ஒரு பிரச்சினையாக உள்ளது. நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார்? பிரதமர் யார்? என்பது மக்களின் முக்கிய பிரச்சினையல்ல. நாட்டை நேசிக்காத, அதிகாரங்களை பற்றி மாத்திரமே சிந்திக்கும் அரசியல்வாதிகளை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். 2015 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எனக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள். நான் அந்த நம்பிக்கையை உடைத்து எறியவில்லை. மக்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை இனங்கண்டு கொள்ள வேண்டும்.
இன்று நான் இங்கு வரும்போதும் காணாமல்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. காணாமல்போனோர் அலுவலகத்தை உருவாக்க சட்டம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வலுவலகம் தற்போது தனது கடமைகளை ஆரம்பித்துள்ளது. எனவே இதுதொடர்பாக நாம் மேலும் பேசிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. நாம் அனைவரும் இணைந்து நாட்டின் நன்மைக்காக செயலாற்றுவோம். இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவோம். இவ்வாறு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்