எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : 2013-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா எத்தகைய பணிகளை மேற்கொண்டாரோ அந்த பணிகளை அவரது வழியில் தற்போது அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைசெயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
உரிமம் ரத்து
மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலேயே 2013-ஆம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை அருகில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அந்தப்புகாரின் அடிப்படையிலே கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்டுள்ள மின்இணைப்பை ஜெயலலிதா துண்டித்தார். ஸ்டெர்லைட் ஆலையினுடைய உரிமத்தையும் ரத்துசெய்தார். அதை எதிர்த்து, அந்த நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 31-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதியை பெற்றது. 8.8.2013 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் சில நிபந்தனைகளை விதித்து அந்த ஆலையை துவக்கிக் கொள்ளலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கியது.
ஆலைக்கு மின்சாரம் துண்டிப்பு
2013-ல் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலே முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதியன்று, ஆலையை தொடர்ந்து இயக்குவதற்காக அந்த நிர்வாகம் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பம் செய்தது. அரசு அதை நிராகரித்து விட்டது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினுடைய உத்தரவின்பேரில் தமிழக மின்சார வாரியம் ஆலைக்கு வழங்கக்கூடிய மின் இணைப்பை இன்று துண்டித்து விட்டது. ஆகவே, அரசு தொடர்ந்து மக்களுடைய உணர்வை மதித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2013-ல் இந்த ஆலை மூடுவதற்கு எத்தகைய பணிகளை மேற்கொண்டார்களோ, அந்த பணிகளை தற்போது அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
அப்பாவி மக்களை தூண்டிவிட்டு...
தற்பொழுது வேண்டுமென்றே அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சில எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும், சில இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு, போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அரசு கிட்டத்தட்ட4, 5 மாதமாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், போராட்டக்காரர்களை அழைத்து 14 முறை கூட்டம் நடத்தி அரசால் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கமாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மாவட்ட கலெக்டர் அரசின் நிலைப்பாட்டை நாளிதழ்களில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக விளம்பரம் செய்திருக்கின்றார். ஸ்டெர்லைட் ஆலை 2013-லிருந்து 2018 வரைக்கும் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்தது, அது ஏப்ரல் 9-ம் தேதி மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதியில்லாமல் ஆலையை இயக்க முடியாது.
சமூக விரோதிகள் ஊடுருவல்
இவை அத்தனையும் அந்தப் பகுதி மக்களுடைய உணர்வுகளை, அவர்களுடைய வேண்டுகோளை அரசால் சட்டத்திற்குட்பட்டு நிறைவேற்றப்பட்டு வந்திருக்கிறது. பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள். அப்படி நடத்துகின்ற பொழுதெல்லாம் அமைதி காத்து, அறவழியிலே போராட்டம் நடத்தினார். ஆனால், இந்த முறை சில எதிர்க்கட்சிகளின் துண்டுதலின் பேரில், சில சமூக விரோதிகள் ஊடுருவி, அப்பாவி ஜனங்களை பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலே இந்த போராட்டத்தை இன்றைக்கு ஒரு மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இன்றைய தினம் உயிரிழந்த அத்தனைபேருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், மிகுந்த வேதனையும், துயரமும் நாங்கள் அடைந்துள்ளோம்.
மூடுவதற்கு நடவடிக்கை
ஏனென்று சொன்னால் அரசால் இவ்வளவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் என்ன, என்ன கோரிக்கை வைத்தார்களோ, அதையெல்லாம் அரசால், சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஏப்ரல் 9-ம் தேதியன்று மாசுக்கட்டுப்பாடு வாரியம் அந்த ஆலை தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பித்ததையும் நிராகரித்துள்ளது. அதற்கும், அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கில் அரசின்சார்பாக வழக்கறிஞர்கள் அரசின் கருத்தை எடுத்து வைத்து வாதிட்டார்கள். ஆகவே, அரசைப் பொறுத்தவரைக்கும் மக்களுடைய உணர்வுக்கு மதிப்பளிக்கின்ற அரசு. இந்த ஸ்டெர்லைட்ஆலையைப் பொறுத்தவரைக்கும் அதை மூடுவதற்குண்டான நடவடிக்கையைஅரசு சட்டத்தின் வாயிலாக இன்றைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆகவே, அன்றையதினம் நடைபெற்ற சம்பவம் ஒரு விரும்பத்தகாத சம்பவம். அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அந்த தடை உத்தரவில், ஒருபொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது. ஆகவே, விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகத்தான் இந்த 144 தடை உத்தரவே போடப்பட்டது. ஆனால், சில விஷமிகளும், சில அரசியல் கட்சித்தலைவர்களும் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பயன்படுத்தி அத்தகைய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று மிகவேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்12 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 18 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 17 hours ago |
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
விஸ்வரூபம் எடுக்கும் ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடகா, ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட்
30 Apr 2024புதுடெல்லி : கர்நாடக அரசியலில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த ஹாசன் தொகுதி எம்.பி.
-
உலக கோப்பை தொடர்: இங்கி.-தென்னாப்பிரிக்கா டி-20 அணிகள் அறிவிப்பு
30 Apr 2024லண்டன் : டி-20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காஅணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றைக்குள்....
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
30 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன் ?
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.