முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 4 ஆண்டுகளில் பார்லி.க்கு 19 நாட்கள் மட்டுமே வந்த பிரதமர் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் பாராளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி வருகை தந்திருப்பதால், அவர் முறையாக பாராளுமன்றத்துக்கு வருகைதர உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இது குறித்து மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாகவே 19 நாட்கள்தான் பாராளுமன்றத்துக்கு வந்துள்ளார். அவ்வாறு வந்த போதிலும் சில முறையே மோடி பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். அரசின் மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் போதும், 5 முறை தனது அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போதும், நன்றி தெரிவிக்கும் தீர்மானித்தின் மீது 6 முறையும், சிறப்பு விவாதத்தின் மீது 2 முறையும் மோடி பேசியுள்ளார். அதேசமயம், பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் தான் சார்ந்திருக்கும் பா.ஜ.க. கட்சி சார்பில் நடந்த 800 பேரணிகளில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.

நாட்டில் நிலவும் பல முக்கிய பிரச்சினைகளின் போதும் மோடி கருத்து தெரிவிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய போது அவர் மவுனியாகவே இருந்து விட்டார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் ஒவ்வொரு 14 நாட்களுக்கும் பேசும் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுவதில்லை. பாராளுமன்றத்தில் உள்ள அவரின் அலுவலகத்துக்கு வரும் மோடி, அவைக்கு வருவதில்லை. ஆதலால், நீதிமன்றம் தலையிட்டு, பிரதமர் மோடி முறையாக பாராளுமன்றத்துக்கு வருகைதர உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். இவ்வாறு சஞ்சய் சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து