முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசியாவில் நடைபெற்றதாக அமெரிக்கா அறிக்கை

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,கடந்த 2017- ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் நடைபெற்றதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆசியாவில் மட்டும் ...உலக அமைதி மற்றும் நாடுகளின் ஸ்திரதன்மைக்கு மிகப்பெரும் சவாலாக பயங்கரவாதம் திகழ்கிறது. இந்த சூழலில், பயங்கரவாதம் பற்றி அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வகையில் உள்ளது. அதாவது, உலக அளவில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களில் 59 சதவீத தாக்குதல்கள்  ஆசியாவில் மட்டும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், பிலிப்பைன்ஸ் ஆகிய ஐந்து ஆசிய நாடுகளில் மட்டும் 2017-ல் 59 சதவீதம் தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

27 சதவீதம் உயர்வு.....ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு பாயங்கரவாத தாக்குதல்கள் 23 சதவீதம் குறைந்து உள்ளது தெரியவந்துள்ளது. அதேவேளையில், பயங்கரவாதத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 27 சதவீதம் அதிகரித்துள்ளன. 2017-ல் 100 நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது இதில், 70 சதவீத உயிரிழப்புகள் ஆப்கானிஸ்தான், ஈராக், நைஜீரியா, சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளில் மட்டும் நடைபெற்றதாக பயங்கரவாதம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து