முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப் பிரதேசத்தில் புழுதிப் புயலில் 27 பேர் பலி

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னௌ, ஏப்.20 - உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பலத்த புழுதிப் புயலுக்கு 27 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இது குறித்து மாநில அதிகாரிகள் கூறுகையில், மாநிலத்தில் வீசிய பலத்த புழுதிப் புயலால் பல இடங்களில் மரங்கள் மேரோடு சாய்ந்தன. குடிசை வீடுகள் சேதமடைந்தன. இத்துடன் மாநிலத்தின் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் சேதமடைந்தன. பலத்த காற்றை தொடர்ந்து மழை பெய்தது. கடுமையான புழுதிப் புயலால் ஃப்ரூக்காபாதில் 10 பேர், பாரபங்கியில் 2 பேர், லக்னௌ மற்றும் சீதாபூரில் தலா 3 பேர், ஹர்டோய், ஜலாவ்ன் மற்றும் ஃபைசாபாதில் தலா ஒருவரும் உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து வைனிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வாமிலை மாற்றம் உத்தரப்பிரதேசத்தில் பிரதிபலித்துள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்