முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜகவை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை: காங்.

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, செப் 16 - உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முன்னாள் மத்திய இணை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் கூறினார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது,

உள்ளாட்சி இடைத் தேர்தலை புறக்கணித்துள்ள திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வேண்டுகோள் விடுத்தார். அவர் எந்த அடிப்படையில் இந்த வேண்டுகோளை விதித்தார் என தெரியவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்கா எந்த ஆயுதத்தையும்எடுக்கலாம் என்பது பாஜகவுக்கு வேண்டுமானால் உடன்பாடாக இருக்கலாம் ஆனால் காங்கிரசுக்கு தெளிவான கொள்கை உண்டு. எப்போதும் கொள்கையின் வழியே காங்கிரஸ் செயல்படும். சமூக நல்லிணக்கம், சமய சமத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட கட்சி காங்கிரஸ். எனவே மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் பாஜகவை காங்கிரஸ் ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்