முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவமழை: நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 22 - மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின்படி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்.எஸ்.பி.வேலுமணி வடகிழக்குப் பருவமழை தொடர்பாக ஊராட்சிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச்செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 79,394 குக்கிராமங்களை உள்ளடக்கிய 385 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்கள்.

மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் உள்ள நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்கவும், பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கவும், கழிவு நீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனுக்குடன் அகற்றவும், சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்யவும் உள்ளாட்சி அமைப்புகளில் அலுவலர்கள் குழுவை அமைத்து போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள். மழையின் காரணமாக காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்க ஊரகப் பகுதிகளை சுத்தப்படுத்தவும், கொசு மருந்துகள் தெளித்தல் போன்ற நடவடிக்கைகயை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், மழைநீர் பாதிப்பு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர கால தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய அலுவலர்களின் தொலைபேசி எண்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரியப்படுத்திட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள். ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், சுகாதார நடவடிக்கைகளுக்காக 20 தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், கிராம ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்தப்படுத்தவும், குளோரின், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை தேவையான அளவில் இருப்பு வைப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொண்டார்.

மழையின் காரணமாக ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகளில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கா.பாஸ்கரன்,கூடுதல் இயக்குநர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்