முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்பு : மயிலாடுதுறை அதிமுகவினர் கொண்டாட்டம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      திருச்சி

மயிலாடுதுறை நகரில் அ.தி.மு.க-வின்; கட்சி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றதையொட்டி வெடி வெடித்து இனிப்பு வழங்கினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி அவர் வகித்து வந்த கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு செயற்குழு, பொதுக்குழு மூலம் சசிகலா தேர்வு செய்யப்பட்டு பொது செயலாளர் பதவி ஞாயிற்றுக் கிழமை காலை (நேற்று) ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து சசிகலா பொது செயலாளராக பதவி ஏற்று நேற்று காலை மயிலாடுதுறை முன்னாள் நகரச் செயலாளர் செந்தமிழன் தலைமையேற்று முன்னாள் நகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மொத்த விற்பனை பண்டகசாலை சேர்மன் எஸ். அலி ஆகியோர் முன்னிலையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் ஊர்வலமாக மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்ததும் வெடி வெடித்து பேருந்து பயணிகள் பேருந்தில் செல்லும் பயணிகள் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் கட்சி பொருப்பாளர்கள் பாலா,

 

கரு. ராமச்சந்திரன், சுதாகர், பூரண சந்திரன், பழ அன்பழகன், மார்க்கெட் சுந்தர், முன்னாள் நகர கவுன்சிலர்கள் உமா சந்திரன், பகவதி குமார் ஆனந்தன், ரெங்கநாதன், ஆட்டோ அய்யாவு, எஸ்.என்.ஜி. பாலு, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் வக்கீல் செல்வராஜ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்