முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 47 பயனாளிகளுக்கு ரூ.5.10 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள்:கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      நாமக்கல்
Image Unavailable

Source: provided

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (02.01.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 329 மனுக்கள் வரப்பெற்றன.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் எதிர்பாரதவிதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் மரணமடைந்த 3 நபர்களின் குடும்பத்தாருக்கு திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் தலா.ரூ.1.00 இலட்சமும், 1 நபரின் குடும்பத்தாருக்கு ரூ.50,000ம் என மொத்தம் 4 நபர்களின் குடும்பத்தாருக்கு ரூ.3.50 இலட்சம் விபத்து நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 7 மகளிருக்கு தலா ரூ.3260 வீதம் ரூ.22,820 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும், நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில் 15 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 மாற்றுத்திறனாளிக்கு தலா ரூ.5,800 வீதம் ரூ.17,400 மதிப்பிலான சக்கர நாற்காலிகளையும், 8 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,000 வீதம் ரூ.1,20,000 மதிப்பிலான காதொலிக்கருவிகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,37,400 மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் 10 மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 47 பயனாளிகளுக்கு ரூ.5,10,220 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி, நாமக்கல் வட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்