முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் இரத்த தான முகாம்.

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்--  கொடைக்கானலில் இரத்த தான முகாம் நடந்தது.

கொடைக்கானல் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் நடந்த இந்த இரத்த தான முகாமிற்கு கொடைக்கானல் மறை வட்ட அதிபர் அருட் தந்தை ஜெரோம் எரோனிமுஸ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமிற்கு கூட்டமைப்பின் தலைவர் சுதாகர், திண்டுக்கல் இரத்த வங்கியின் தலைமை மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தார்.கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தேவாலய போதகர் குட்டிமணி துவக்க ஜெபம் செய்தார். கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் கிட்டுத்துரை வரவேற்றார். ஹாலி சுரேஸ் ஒருங்கிணைப்பு செய்தார். இந்த முகாமில் கொடைக்கானல் அரசு மருத்துவமணை டாக்டர்கள் அரவிந்த், மீனா, கொடைக்கானல் வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் சாம்ஜெகன், மூஞ்சிக்கல் சி.எஸ.ஐ. தேவாலய போதகர் டேவிட் பொன்பாண்டியன், வழக்கறிஞகர் ஜெசிந்தா, பொது சுகாதார பிரிவினை சேர்ந்த வல்லவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டானர். இந்த முகாமில் 175 பேர்கள் இ;ரத்த தானம் செய்தனர்.
முகாமிற்கான் ஏற்பாடுகளை கொடைக்கானல் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ இளைஞர் கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்