முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 10 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த  ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 10 பேரை அப்பகுதியில் ரோந்துவந்த இலங்கை கடற்படையினர் திங்கள் கிழமை நள்ளிரவில் கைது செய்தனர்.

  ராமேசுவரம் பகுதியிலிருந்து  திங்கள் கிழமை காலையில் 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இவர்கள் கச்சத்தீவு அருகே பல பகுதிகளில் பிரிந்து சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திங்கள் கிழமை நள்ளிரவில் அப்பகுதி வழியாக ரோந்த வந்த  காங்கேசன் துறை பகுதியை சேர்ந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த கான்ஸ் என்பவர்க்கு சொந்தமான படகை சுற்றி வளைத்தனர்.பின்னர் படகிலிருந்து மீனவர்கள் அத்தனாஸ்,அருண்ஜார்ஜ்,முத்துமுருகன்,செல்வம்,அர்ச்சுனன்,அந்தோணி எடிசன்,அருண்,ராசு,முனியசாமி,கிளாரன் ஆகிய பத்து  பேரையும் கைது செய்தனர்.பின்னர் மீனவர்களை  காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.பின்னர் செவ்வாய்க்கிழமை காலையில் ஊர்க்காவல்துறை போலீஸாரிடம் 10 மீனவர்களையும் ஒப்படைத்தனர்.அங்கு மீனவர்களிடம் போலீஸார் விசாரணை செய்து  எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.அங்கு மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி   பிப்ரவரி 21ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.அதன் பேரில் மீனவர்கள் 10 பேரையும் போலீஸார் யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.            

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்