முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீரடி சாய்பாபா கோவிலுக்கு 2 கிலோ தங்க காலணி

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூலை 2017      ஆன்மிகம்
Image Unavailable

சீரடி, மகாராஷ்டிரா மாநிலத்தில் புகழ்பெற்ற சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.

பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கைகளையும் செலுத்தி வருகிறார்கள்.

ஆக்ராவை சேர்ந்தவர் சந்தியா குப்தா. தீவிர சாய்பாபா பக்தையான அவர் சீரடி சாய்பாபா கோவிலுக்கு 2 கிலோ தங்க காலணிகளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ''நான் அளித்த தங்க காலணிகள் குரு தட்சனையாக ஏற்கப்பட்டுள்ளதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார்.

சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று குருபூர்ணிமா விழா தொடங்கியது. இதையொட்டி சந்தியா குப்தா தங்க காலணிகளை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

குரு பூர்ணிமா விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சீரடியில் குவிந்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து