எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதில் சொல்லும் பொறுப்பு என்பது பொறுப்பு உணர்வுடன் தொடர்புடையதாகும். அது ஒருவருடைய பொறுப்புணர்வின் ஆழத்தை அளந்து கணித்துவிடுகிறது. பதில் சொல்லும் பொறுப்பு, பொறுப்புக்களின் அடிப்படையில் ஒருவர் பெறும் வெற்றியைத் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறது. தனது வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவே முற்படுகிறது.
மேலும் தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வதும் இந்த பொறுப்புணர்வே. அதே நிலையில் அவர் தோல்வியைத் தழுவுகிறபோது, தோல்விக்கான முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு ஆட்படுகிறது. தோல்வியின்போதுதான் தன்நிலையறிந்து நிதானத்துடன் செய்படுகிறது. பிறர் மீது பழி போடுவதற்குரிய வழிவகைகளை அது தேடுவதில்லை. யாரையாவது கைகாட்டிவிட்டு நாம் தப்பித்துவிடலாம் என்றும் யோசனை செய்வதில்லை. தவறுகளை அது தனக்குரியனவாக ஏற்றுக்கொள்கிறது. அதற்காகத் தவறுகளை எவ்வாறாவது நியாயப்படுத்த அது முயற்சி செய்வதில்லை.
பதில் சொல்லும் பொறுப்புடைமை ஐயங்களையும், அச்சங்களையும், அவநம்பிக்கைகளையும் அறவே களைந்துவிடுகிறது. அந்த பொறுப்புக்கு உட்படுத்தப்பட்டவுடன் தன்னிடமுள்ள அச்சங்களையும் ஐயங்களையும் அகற்றி தெளிவுடன் செய்பட ஆரம்பிக்கிறது. மேலும் தன்னிடம் ஒப்படைக்கப் பெற்ற கடும் பனிகளைப் பொறுப்புணர்வோடு நிறைவேற்றுகிறது. கவனத்தோடும், ஊக்கம் தளராமலும் தமது கடமைகளைப் பதில் சொல்லும் பொறுப்பு நிறைவேற்றுகிறது. இதனாலேயே அது தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லுகிறது.
அது நல்லெண்ண உறுதிப்பாட்டையும் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது. நம்பிக்கை உறுதிப் பாட்டுக்கு ஒருவர் உரியவரா என்பதைப் பதில் சொல்லும் பொறுப்பு நிரூபித்துவிடுகிறது. ஒருவரது நம்பிக்கைக்கு அது ஊட்டமளிக்கிறது. பதில் பொறுப்புடையவராக நடந்துகொள்வோரிடம் மக்கள் தங்கள் மதிப்பையும் நம்பிக்கையினையும் வெளிப்படுத்துகின்றனர். முழுமையான நம்பிக்கையையும் அவர்களிடம் வைக்கின்றார்கள். பெரிய பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குப் பதில் சொல்லும் பொறுப்பு வழிகோலுகிறது. அது முழுமையினையும் மனநிறைவினையும் அளிக்கிறது.
நற்செய்தி கூறும் கதை :
வெளியூருக்குப் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்தார். தமது உடைமைகள் அனைத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தார். அவர் அவர் திறமைக்குத் தக்கவாறு ஒருவருக்கு 500 ரூபாயும், மற்றொருவருக்கு 300, வேறொருவருக்கு 100 எனவும் வழங்கிச் சென்றார். 500 ரூபாய்களைப் பெற்றவர், உடனடியாக அவற்றைப் பயன்படுத்திவேறு 500 சம்பாதித்தார். அவ்வாறே, 300 பெற்றவரும் மேலும் 300 சம்பாதித்தார். 100 ரூபாய் பெற்றவர் மண்ணைத் தோண்டித் தம் தலைவரது பணத்தைப் புதைத்துவைத்தார்.
நெடுங்காலத்திற்குப் பிறகு, அப்பணியாளர்களின் தலைவர் திரும்பிவந்து கணக்குக் கேட்டார். ரூ.500 பெற்றவர் அவரிடம் வந்து “ஐயா! நீங்கள் கொடுத்த ரூ.500-ஐ முதலீடாக்கி கூடுதல் 500 சம்பாதித்தேன்” என்றார். அதற்கு அத்தலைவர்,“நல்லது நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர்; ஆதலால் பெரியவற்றுக்கு அதிகாரியாக நியமிப்பேன்” என்று பாராட்டினார்.
ரூ.300 பெற்றவரும் அவரிடம் வந்து “ஐயா நீங்கள் ரூ.300 கொடுத்தீர்கள்; மேலும் ரூ.300 சம்பாதித்துள்ளேன்” என்றார். அதற்கு அத்தலைவர்,“நல்லது நம்பிக்கைக்குரிய நல்லபணியாளரே, சிறியவற்றில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தீர். பெரியவற்றுக்கு அதிகாரி ஆக்குவேன்” என்றார். ரூ.100 பெற்றவரோ திரும்பிவந்து “ஐயா, உம் குணங்களை நான் நன்கு அறிவேன்; நீங்கள் கடுமையானவர்; விதைக்காத இடத்தில் அறுப்பவர், தூவாத இடத்தில் சேர்ப்பவர். ஆகவே உங்களுக்கு அஞ்சி, கொடுத்த பணத்தை நிலத்தில் புதைத்துவைத்தேன்.
இதோ! நீங்கள் கொடுத்த அதே பணம்!” என்று திரும்பித் தந்தார். அதற்குத் தலைவர், “சோம்பேறிப் பணியாளனே, என் பணத்தை நீ வட்டிக்காரரிடம் கொடுத்திருந்தாலும் கூட, நான் வந்தவுடன் எனது தொகையை வட்டியுடன் பெற்றிருப்பேன்! எனவே, இவனிடமுள்ள பணத்தைப் பிடுங்கி ரூ.1000 உள்ளவனுக்குக் கொடுங்கள்;; பயனற்ற இந்தப் பணியாளனைச் சிறையிலே தள்ளுங்கள்” என்றார்.
பதில் சொல்லும் பொறுப்புடைமையை வளர்த்துக் கொள்ள வழிமுறைகள் :
1. நல்லதே செய்தல் வேண்டும். நல்ல நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். தீயதை அரவே ஒழித்து விலக்கல் வேண்டும்.
2. ஒருவருடைய நற்பண்பு நலன்களையும், நல்ல திறன்களையும் வளர்த்தல் வேண்டும்.
3. கல்வி நமக்கு வழங்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
4. உடைமைகளைக் கவனத்துடன் பயன்படுத்துதல்.
5. தம்மிடம் ஒப்படைத்த பணத்தை அறிவாற்றலுடன் செலவிடுதல்.
6. மூலவளங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
7. தம்மிடம் ஒப்படைத்த பொருள்களைக் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுதல்.
8. சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல்.
9. காலத்தைத் திட்டமிட்டுச் செலவிடுதல்.
10. பொது இடங்களில் கண்ணியமாக நடந்து கொள்ளுதல்.
11. சட்டஒழுங்குகளைக் கடைபிடித்தல்.
தமது திறமை முழுவதையும் கவனத்துடன் நிறைவேற்றுதல்.
தமது கட்டுப்பாடுகளைக் கவனத்துடன் நிறைவேற்றுதல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 6 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 6 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 6 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.