முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு: லல்லு மகள் மிசா பாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ராஞ்சி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதி மற்றும் இவரது கணவர் சைலேஷ் குமாருக்கு எதிராக அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.கே.மல்ஹோத்ரா முன்னிலையில் அமலாக்கத் துறை வழக்கறிஞர் நிதேஷ் ரானா இதனை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு பண்ணை வீட்டை அமலாக்கத்துறை ஏற்கெனவே முடக்கியது. தெற்கு டெல்லியின் பிஜ்வசான் பகுதியில் ‘பாலம் பார்ம்ஸ்’ என்ற பெயரிலான இந்த பண்ணை வீடு, மிசா பாரதி மற்றும் சைலேஷ் குமாருக்கு சொந்தமானது. மிஷைல் பேக்கர்ஸ் அண்ட் பிரின்ட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த வீடு கடந்த 2008-09-ல் ரூ.1.2 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் வாங்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

போலி நிறுவனங்களை பயன்படுத்தி பல கோடி ரூபாயை சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக சுரேந்திர ஜெயின், வீரேந்திர ஜெயின் சகோதரர்கள் மற்றும் சிலருக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக மிசா பாரதியின் டெல்லி பண்ணை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதையடுத்து ஜெயின் சகோதரர்கள் இருவரும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, ராஜேஷ் அகர்வால் என்ற பட்டய கணக்காளரும் கைது செய்யப்பட்டார்.

ரூ.1.2 கோடி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஜெயின் சகோதரர்கள், ராஜேஷ் அகர்வால், மிசா பாரதி, சைலேஷ் குமார் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து