முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் சவுதிப் படைகள் நடத்திய வான் வழித் தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் பலி

புதன்கிழமை, 27 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஏமன்: இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''தென் மேற்கு ஏமனில் உள்ள டேஸ் நகரில் சவுதிப் படைகள்  வான்வழித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் 11 பேரும், பொதுமக்கள் 14 பேரும் பலியாகினர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தென் மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்து சவுதியின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. சவுதி தலையீடு ஏமனில் ஏற்பட்டது முதல், இதுவரை 7,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து