முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்க முதல்வர் மம்தா மீது அசாம் போலீஸ் வழக்கு

வெள்ளிக்கிழமை, 5 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலம் அகமதுபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசுகையில், அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் மேற்கு வங்க மாநில மக்களை அங்கிருந்து வெளியேற்ற மத்திய அரசு சதி திட்டம் தீட்டியுள்ளது. இதற்காகவே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் கொண்டு வருகிறது. கடந்த 31ம் தேதி இது தொடர்பான வரைவு பதிவேடு வெளியிடப்பட்டது. அதில் அசாம் மாநிலத்தில் உள்ள வங்க மொழி பேசும் மக்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. திட்டமிட்டு அவர்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில் திருத்தம் செய்தது தொடர்பாக வெளியிடப்பட்ட வரைவு பதிவேட்டில் அசாம் மாநிலத்தில் உள்ள வங்க மொழி பேசும் மக்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களை திட்டமிட்டு வெளியேற்ற முயற்சி நடக்கிறது. - மம்தா பானர்ஜி

அவரது இந்த பேச்சுக்கு அசாமில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தின்சுகியா, வில்வநாத் உள்பட பல இடங்களில் மம்தாவின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதற்கிடையே மம்தா மொழி ரீதியாக மக்களிடையே பகை உணர்ச்சியை தூண்டி விடுவதாக கவுகாத்தி ஐகோர்ட் வக்கீல் தைலேந்திரநாத் தாஸ், விவசாய அமைப்பின் தலைவர் பிரதீப் கவிதா இருவரும் போலீசில் புகார் செய்தனர். அந்த புகார்களை போலீசார் ஏற்றுக் கொண்டனர்.

அசாம் மாநில போலீசார் அந்த இரு புகார்களையும் ஒருங்கிணைத்து மம்தா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவி்த்துள்ளது. வழக்கு பதிவு செய்து மம்தாவின் போராட்டத்தை தடுத்து விட முடியாது என்று திரிணாமுல் காங்கிரசார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து