முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ரெயில்வே தேசத்தினை கட்டமைக்கும் ஓர் அமைப்பு - குடியரசு தலைவர் ராம் நாத் பெருமிதம்

புதன்கிழமை, 10 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய ரெயில்வே தேசத்தினை கட்டமைக்கும் ஓர் அமைப்பு என குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு ரெயில் சேவைகளில் பணியாற்றுகிற தற்காலிக அதிகாரிகள் கொண்ட குழுவின் முன் பேசும்பொழுது, நாட்டின் கலாசார வழி மற்றும் மரபுகள் ஆகியவற்றை மேம்படுத்த மற்றும் பரப்புவதற்கு ரெயில்வே நெட்வொர்க் உதவுகிறது என கூறினார். இந்திய ரெயில்வே தேசத்திற்கான சேவை அமைப்பு மற்றும் தேசத்தினை கட்டமைக்கும் ஓர் அமைப்பு என ராம்நாத் கூறியுள்ளார்.
பயணிகளுக்கு சேவை

கடந்த 2015 முதல் 2016ம் ஆண்டு வரையில் 800 கோடி பயணிகளுக்கு இந்திய ரெயில்வே சேவை செய்துள்ளது. தொழிற்சாலை மற்றும் வேளாண் பொருட்கள், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோரை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் பணியினை ரெயில்வே செய்து வருகிறது என்றும் ராம்நாத் கூறியுள்ளார்.

இணைந்திருக்கிறீர்கள்...

கும்பமேளா திருவிழாவிற்கான சிறப்பு ரெயில்களானாலும் அல்லது மதிப்புமிக்க பேலஸ் ஆன் வீல்ஸ் ஆடம்பர ரெயிலானாலும் உலகம் முழுவதுமுள்ள மக்களின் எண்ணத்தினை அது கவருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதிக நகரங்களை இணைக்கும் வகையில் விரைவான, பாதுகாப்பு நிறைந்த மற்றும் போதிய அளவிலான மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் நாட்டிற்கும் மற்றும் லட்சக்கணக்கான குடிமக்களுக்கும் சேவை செய்யும் ஒரு தனித்துவ வாய்ப்பினை வழங்கியுள்ள ரெயில்வே அமைப்பில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என தற்காலிக அதிகாரிகளுக்கு நினைவுப்படுத்தி பேசியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து