முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கக்கன்சிபுரம், ஏ.ஜெட்டிஹள்ளி கிராமங்களில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம் கக்கன்சிபுரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டு, பொதுமக்களிடையே தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் தனி நபர் கழிவறை அமைத்து பயன்படுத்தும் ஹரிதேவி காளியப்பன் அவர்களிடம் கலந்துரையாடினார்.

துண்டு பிரசுரங்கள்

அதனை தொடர்ந்து ஏ.ஜெட்டிஹள்ளி, வள்ளுவர் நகரில்; தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டு, பொதுமக்களிடையே தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். பின்னர் ஒட்டப்பட்டியில் தூய்மை பாரத இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் துண்டு பிரசுரங்கள் ஒட்டி விழிப்புணர்வு பணியினை மேற்கொண்டார். அதன்பின் தருமபுரி அரசினர் சுற்றுலா மாளிகையில், தருமபுரி மாவட்டம் குறித்த விளக்க தொகுப்பினை பார்வையிட்டார்.

இந்நிகழ்வின்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் , கலெக்டர் கே.விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து