முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

ஞாயிற்றுக்கிழமை, 18 பெப்ரவரி 2018      விருதுநகர்
Image Unavailable

 அருப்புக்கோட்டை  அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்க்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பூட்டிய வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் வீட்டிற்க்குள் புகுந்து பணம் நகை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் உத்தரவின்பேரில்  தாலுகா காவல் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆலோசனையின் படி பொதுமக்களுக்கு வழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் போலீசார் உதவியுடன் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர். அதில் குறிப்பாக வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள்  துணை கண்காணிப்பாளர் அலுவலக எண்ணிற்க்கும்,  தாலுகா காவல் நிலைய எண்ணிற்க்கும் தகவல்  தெரிவித்துவிட்டு செல்லவும், சந்தேகப்படும்படியாக சுற்றி திரியும் நபர்களை கண்டாலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் குறிப்பிடப்பட்டிருந்தது.       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து