முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் அபார வெற்றியால் திரிபுரா இனி வளர்ச்சி பெறும்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கருத்து

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      அரசியல்
Image Unavailable

லக்னோ, திரிபுராவில் பா.ஜ.க வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. எனவே திரிபுரா மாநிலம் இனிமேல் வளர்ச்சி பெறும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதனால், இதனால் திரிபுரா தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் பா.ஜ.க சற்று முன்னிலை வகித்தது. பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி, பா.ஜ.கவை விட கூடுதலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. எனினும் தற்போது பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது,

திரிபுராவில் பா.ஜ.க வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவும் இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளனர். 25 ஆண்டுகால ஆட்சியை இடதுசாரி கூட்டணி ஆட்சியை திரிபுரா மக்கள் புறக்கணித்துள்ளனர். திரிபுரா மாநிலம் இனிமேல் வளர்ச்சி பெறும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து