முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் ஏர்செல்

செவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018      வர்த்தகம்
Image Unavailable

ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைக் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதால், சிக்னல் தடைபட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் கோடி கட்டணத்தை ஏர்செல் நிறுவனம் நிலுவையில் வைத்துள்ளது.

இதற்கிடையே தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் எர்செல் தொடர்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தது. இதன்பின்னர் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். ஏர்செல் வாடிக்கையாளர்கள் எம்என்பி மூலம் பல்வேறு செல்போன் சேவை நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர்.

இதற்கிடையே ஏர்செல் நிறுவனத்தில் பணியாற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் அந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து