முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவின் அப்ரின் நகரை ஆக்கிரமிக்க மாட்டோம்: துருக்கி

செவ்வாய்க்கிழமை, 20 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

அப்ரின்: சிரியாவில் குர்துப் படையினர் கட்டுப்பாட்டில் இருந்து வந்த அப்ரின் நகரைக் கைப்பற்றியுள்ள தங்களது ஆதரவுப் படையினர், அந்த நகரை தொடர்ந்து ஆக்கிரமித்திருக்க மாட்டார்கள் என்று துருக்கி தெரிவித்துள்ளது.

துருக்கியில் தனி நாடு கோரி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குர்து மக்கள் அமைப்பினர், அந்தப் போராட்டத்தைக் கைவிட்டு தற்போது கூடுதல் அதிகாரத்தை மட்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், அந்த அமைப்பின் ஒரு பிரிவினர் துருக்கியில் பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு, அண்டை நாடான சிரியாவைச் சேர்ந்த குர்துப் படையினர் உதவியளித்து வருவதாக துருக்கி குற்றம் சாட்டி வருகிறது.

எனினும், சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டு குர்து படையினருக்கு அமெரிக்கா உதவியளித்து வருகிறது. இதன் காரணமாக, நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளான அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்தத் சூழலில், எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள குர்து நகரமான அஃப்ரினில் துருக்கி உதவியுடன், அந்த நாட்டு ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் தாக்குதல் நடத்தி முன்னேறத் தொடங்கினர்.
தொடர்ந்து நடைபெற்று வந்த சண்டையில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், அப்ரின் நகரை துருக்கி ஆதரவுப் படை ஞாயிற்றுக்கிழமை முழுமையாகக் கைப்பற்றியது. குர்து இனத்தவர்கள் அந்த நகரைவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, துருக்கி துணைப் பிரதமர் பெக்கீர் போஸ்டகின் செய்தித் தொடர்பாளர் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை கூறியதாவது: அப்ரின் நகரில் எங்களது படை தொடர்ந்து தங்கியிருக்காது. காரணம், நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து