எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ராமராஜ்ய ரதயாத்திரையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் அனுமதித்து விட்டு தமிழகத்தில் எதிர்க்கலாமா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் ராமராஜ்ய யாத்திரை தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு ஒன்றை எழுப்பினார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவரை பதிலளிக்காமல் தி.மு.க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதுவரை இல்லாத ...
இதற்கிடையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
பேரவைத் தலைவராகிய நீங்கள் மிகவும் கீழே இறங்கி, பணிவோடு எதிர்க்கட்சிகள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு வாதங்களையும் பொறுமையாகக் கேட்டு, அதற்குப் பிறகு உங்களுடைய தீர்ப்பை வழங்குகின்ற ஒரு நல்ல நடைமுறையை கடைப்பிடித்து வந்திருக்கின்றீர்கள். அதை எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சரியாக புரிந்துகொள்ளவில்லையோ அல்லது புரிந்தும், புரியாமல் நடந்து கொண்டிருக்கின்றார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மிகப் பெரிய, ஒரு தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
மக்களை திசை திருப்பி...
அவர் இந்தப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு, பேச ஆரம்பித்ததிலிருந்து, தமிழகம் இன்றைக்கு அமைதிப் பூங்கா மாநிலமாக, ஜெயலலிதா எந்தளவிற்கு அரசை, சட்டம்-ஒழுங்கை, சட்டத்தின்படி ஆட்சி நடத்திட வேண்டுமென்று எண்ணி ஆட்சி செய்தார்களோ, அதன்படிதான் இன்றைக்கு அரசு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைப் பொறுக்க முடியாமல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஏதாவது ஒரு பிரச்சினையை எழுப்பி, மக்களை திசை திருப்பி, தமிழகத்தில் அரசியல் இலாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அவர் கலந்து பேசி, இம்மாதிரியான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்துகின்ற முயற்சியை முன்னெடுத்திருக்கின்றார்கள். இந்த ரத ஊர்வலம், ஐந்து மாநிலங்கள் வழியாக தமிழகத்தை வந்தடைகின்ற ஒரு சூழ்நிலை உள்ளது. அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநில அரசுகளும் அனுமதி கொடுத்துள்ளன. காங்கிரஸ் ஆளுகின்ற கர்நாடக மாநிலத்திலும்கூட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது.
தமிழக அரசு தடுக்கும்...
கம்யூனிஸ்டு ஆளுகின்ற மாநிலங்களில்கூட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களிலெல்லாம் ஊர்வலம் வந்து, அமைதியாக நடைபெற்றிருக்கின்றது. இங்கே காங்கிரஸ்காரர்களும், அவர்களோடு இணைந்து, எழுந்து கோஷம் போடுகின்ற ஒரு சூழலை ஏற்படுத்துவது, காங்கிரஸ் கட்சிக்கு உகந்ததுதானா என்பதை நீங்கள் சிறிதுகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு நடைபெறும் சூழ்நிலையை நீங்கள் சொல்லுங்கள். இந்த ரத யாத்திரையின்போது, மதக் கலவரத்தைத் தூண்டுகின்ற வார்த்தைகளோ, இங்கே வாழுகின்ற மக்களைப் பிரித்தாளுகின்ற சூழ்நிலையை ஏற்படுத்துகின்ற வார்த்தைகளோ இருந்தால், தமிழக அரசு அதைக் கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்தும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அவை குறிப்பிலிருந்து...
ஸ்ரீ ராமதாசா மிஷன் யூனிவர்சல் சொசைட்டி என்கிற ஒரு அறக்கட்டளை இந்த ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அவர் பேசிய முதல் வார்த்தையிலிருந்து கடைசி வார்த்தை வரை, வன்முறையைத் தூண்டுகிற விதமாக இது இருக்கின்ற காரணத்தினால், அவை முழுவதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று சட்டமன்றப் பேரவையின் தலைவரை கேட்டுக்கொள்கிறேன்.
பெரிய பாரம்பரியம்...
ஆகவே, காங்கிரஸ் கட்சியினுடைய நண்பர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நீங்கள் தீர யோசனை செய்து, இதில் நல்ல முடிவை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் தி.மு.க. எழுந்திருக்கும்போது, நீங்களும் எழுந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் கைவிட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கென்று மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கிறது, வழி இருக்கிறது, கொள்கை இருக்கிறது, கோட்பாடு இருக்கிறது. அவற்றையெல்லாம் நீங்கள் இங்கு சட்டமன்றத்தின் உள்ளே உட்கார்ந்து, காற்றில் பறக்கவிடுகின்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிவிடாதீர்கள் என்பதை இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
புத்திமதி செல்ல...
பேரவைத் தலைவர் அவர்களே, நீங்கள் மிகவும் பொறுமையாக 25 நிமிடங்கள், அவர்களுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் கேட்காமல் இது மாதிரியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை மீண்டும் நீங்கள்அழைத்து, புத்திமதி சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி