முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை சந்தித்தார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று சந்தித்து பேசினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராடி வருகின்றன. மாணவர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சில தினங்களுக்கு முன் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதில் காவிரி போராட்டம், காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. இவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை செய்ய நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் கவர்னர் புரோஹித் டெல்லி புறப்பட்டார். இந்நிலையில்  பிரதமரை பாராளுமன்ற வளாகத்தில் கவர்னர் சந்தித்து பேசினார். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக நிச்சயம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அதைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் கவர்னர் சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து