முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை பாராளுமன்றத்தை முடக்குவோம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை பாராளுமன்றத்தை முடக்குவோம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை எம்.பி. கூறினார்.
நம்பிக்கை உள்ளது

பாராளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை பாராளுமன்றத்தை முடக்குவோம்.  காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும்.   காவிரி வாரியம் அமைக்காவிட்டால் அடுத்த கூட்டத்தொடரிலும் போராட்டம் தொடரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை பாராளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் அறவழி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது.

அரசுக்குத் தான்....
1974 முதல் மத்தியில் உள்ள எந்த அரசும் தமிழகத்துக்கு செவிசாய்க்கவில்லை. தமிழகத்தில் ஆளுநரை விட அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது. ஆய்வு குறித்து ஆளுநரிடம் கேட்ட போது, மக்களை சந்திக்கவே ஆய்வு என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து