முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல்: 2 வீரர்கள் வீர மரணம்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

ராய்பூர் : சத்தீஸ்கரில் போலீஸ் வாகனம் மீது நக்சலைட்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

திடீர்  தாக்குதல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அங்குள்ள காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் நக்சலைட்டுகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை பிடிக்கும் முயற்சியில் மாநில போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில் பிஜாப்பூர் மாவட்டம் குட்ரூ அருகே  நக்சல் தடுப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு வாகனம் மீது திடீர்  தாக்குதல் நடத்தினர். இதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 5 பேர் காயமடைந்தனர். 

வளர்ச்சி பாதைக்கு...

காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நக்சலை சிறப்பு படை இயக்குனர் அவாஸ்தி கூறியுள்ளார். மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் கூட்டு நடவடிக்கைகளின் காரணமாக, "விரக்தியடைந்த மாவோயிஸ்டுகள்" தங்கள் நிலைமைகளை இழந்து வருகின்றனர். இது மாநிலத்தின் வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்திருக்கிறது என அம்மாநில முதல்வர் ராமன்சிங் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து