முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா சட்டசபை தேர்தல்: மனுத்தாக்கல் தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வேட்பு மனு தாக்கல் நேற்று  முதல் தொடங்கியது. வருகிற 24-ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது.

கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி வருகிற 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். 25-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற 27-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியதால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து