முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது: கபில்சிபல் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நாட்டில் எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி விலைக்கு வாங்கப்படும் நிலை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் செய்தியாளர்களிடம்  கூறுகையில், தனது ஆட்சியில் ஊழல் நடக்காது; ஊழல், முறைகேட்டை அனுமதிக்கவும் மாட்டேன் என்று கூறி வரும் பிரதமர் மோடி, நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. அது போன்ற ஒரு சூழல் இல்லாத நிலையை மோடி உருவாக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து