எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்த, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் சிறப்பாக நடைபெற்று வரும் அ.தி.மு.க அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 24- ம் தேதி முதல் 27.ம் தேதி வரை காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
அ.தி.மு.க. அரசுக்கு கிடைத்த வெற்றி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நடத்திய சட்டப் போராட்டங்களும், தர்மயுத்தங்களும் தமிழக மக்களை அரணாகக் காத்து நிற்கின்றன. அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலும், தமிழக முதல்வர் என்ற பதவியிலும் இருந்து, ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டங்களின் வழியில், அ.தி.மு.க அரசும் தொடர்ந்து சட்டப் போராட்டங்களை நடத்தி, உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பைப் பெற்றுள்ளது அ.தி.முக அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். உடனடியாக காவிரி நீர்ப் பங்கீட்டை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முறையாக பருவந்தோறும் விவசாயப் பெருமக்களுக்குப் பயன்படும் வகையில் பங்கிட்டு அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு அதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுக்கூட்டங்கள்
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமைக்கு பெருமை சேர்க்கும் சரித்திர நிகழ்வாகும். ஜெயலலிதாவின் வழியில் மக்கள் நலன் காக்க நடைபெற்று வரும் தமிழக அரசு, இந்தத் தீர்ப்பின் மூலம் கிடைத்திருக்கும் வெற்றியை அவரது பொற்பாதங்களில் வைத்து போற்றி மகிழ்கிறது. காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தருவதில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து, காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் சட்டப் போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பைப் பெற்றுத் தந்த அ.தி.மு.க.வுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.
நாகையில் முதல்வர்
வரும் 27-ம் தேதி திருவாரூரில் நடைபெறும் கூட்டத்திற்கு துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் .திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வரும் 26-ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்,
அமைச்சர்கள் பங்கேற்பு
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் 24-ம் தேதி கரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர் கே.பி.அன்பழகன், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் . பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ராமச்சந்திரன், பெரம்பலூர் ஆகியோர் வரும் 24-ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம். ஆகியோர் வரும் 25-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர், அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர் மற்றும் வீட்டுவசதி வாரியத்தலைவர் வைரமுத்துஆகியோர் வரும் 25-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் வெல்லமண்டி. நடராஜன், வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் . ப. குமார், எம்.பி. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், எம்.பி. ஆகியோர் திருச்சியில் வரும் 26 -ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத். எம்.பி. அருண்மொழிதேவன் ஆகியோர் வரும் 27- ம் தேதி கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்
இந்த கூட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகளும், எம்.பிக்கள் எம்.எல்.ஏ.க்கள் , முன்னாள் அமைச்சர்களும், கட்சியின் அனைத்து நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்திடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை3 days 1 min ago |
ஆப்பிள் பான் கேக்5 days 1 hour ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 3 days ago |
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
-
சென்னையில் நடக்கவிருக்கும் சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. போட்டிக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றன
18 Mar 2024சென்னை : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் தொடங்கியவுடன் விற்று தீர்ந்தன.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது : மும்பை அணி புதிய கேப்டன் ஹர்திக் கருத்து
18 Mar 2024மும்பை : ரோகித் கேப்டனாக இல்லாதது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று மும்பை அணயின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 19-03-2024.
19 Mar 2024 -
சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் வி.சி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
19 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
-
10 ஆண்டு காலமாக மாநில உரிமைகளை பறித்த மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை விரட்டிடுவோம்: முதல்வர் ஸ்டாலின்
19 Mar 2024சென்னை : 10 ஆண்டு காலமாக மாநில உரிமைகளை பறித்த மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியை விரட்டிடுவோம் என்று முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் ராகுல் காந்தி விரைவில் பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகம் புதுவையில் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரையும் ஆதரித்து ராகுல் காந்தி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந
-
சித்திரை திருவிழாவிற்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி துவக்கம்
19 Mar 2024மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
19 Mar 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப். 6-ம் தேதி வரை நீட்டிப்பு
19 Mar 2024புது டெல்லி, மதுபான முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது: சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கும் தி.மு.க அழைப்பு
19 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
-
இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை 85 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிக்க வீடு, வீடாக படிவம் வழங்கப்படும்: சாகு
19 Mar 2024சென்னை : இன்று 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வீடு வீடாக சென்று படிவம் 12 ட
-
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு: தமிமுன் அன்சாரி அறிவிப்பு
19 Mar 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.
-
மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி இங்கிலாந்து தூதரகம் அறிக்கை
19 Mar 2024லண்டன், மன்னர் சார்லஸ் இறந்ததா வெளியான செய்தி வதந்தியே என்று இங்கிலாந்து தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
டெல்லியில் அமித்ஷாவுடன் ராஜ் தாக்கரே சந்திப்பு
19 Mar 2024புது டெல்லி, மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.
-
ஜார்கண்ட் முன்னாள் முதல்வரின் உறவினர் பா.ஜ.க.வில் இணைந்தார்
19 Mar 2024ராஞ்சி, ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மகன் துர்கா சோரனின் மனைவி சீதா சோரன் டெல்லியில் உள்ள பா.ஜ.க.
-
ரபா மீது தாக்குதல் நடத்த திட்டம்: நெதன்யாகுவிடம் கவலை தெரிவித்த அதிபர் பைடன்
19 Mar 2024வாஷிங்டன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், அமெரிக்க அதிபர் ஜோபைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார்.