முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 45 அடியாக அதிகரித்துள்ளது.

கபினி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் மேட்டூரை வந்தடைந்ததால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 847 கனஅடி அளவுக்கே இருந்தது. பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி மாலையில் 5 மணியளவில் விநாடிக்கு 15,000 கன அடியை எட்டியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர் மட்டம் 45.05 அடியாகவும், நீர் இருப்பு 14.83 டி.எம்.சி.யாகவும் உயர்ந்துள்ளது. நீர் வரத்து விநாடிக்கு 32,421 கன அடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 500 கன அடியாகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து