முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 16 மருத்துவர்கள் கலெக்டர் சிவஞானத்திடம் வாழ்த்துப் பெற்றனர்

புதன்கிழமை, 4 ஜூலை 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்- 2018,ஜூலை 1 ம் தேதி மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சிறந்த  சேவையாற்றிய  மருத்துவர்களை கௌரவிக்கும் விதமாக மாநில அளவில் சிறந்த மருத்துவர்களை தேர்ந்தெடுத்து   மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்             மரு.சி.விஜயபாஸ்கர்   விருதினை வழங்கினார்கள். 
விருதுநகர் மாவட்டத்திலிருந்து இவ்விருதுகளை பெற்ற கீழ்க்கண்ட மருத்துவர்கள்  மரு.ஆர்.மனோகரன், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், மரு.ஆ.பழனிச்சாமி,  துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் விருதுநகர், மரு.எஸ்.அமுதா, துணை இயக்குநர் (தொழுநோய்), மரு.எஸ்.வெங்கடேஸ்வரன், குழந்தை நல மருத்துவர், அரசு மருத்துவமனை அருப்புக்கோட்டை, மரு.எம்.பிச்சைக்காளி, மகப்பேறு மருத்துவர், அரசு தலைமை மருத்துவமனை விருதுநகர், மரு.கே.உமாஜெயபாஸ்கர்,  மகப்பேறு மருத்துவர், அரசு  மருத்துவமனை ராஜபாளையம், மரு.பி.குமரகுரு, மயக்கவியல் நிபுணர், அரசு  மருத்துவமனை ஸ்ரீவில்லிபுத்தூர், மரு.எம்.அன்புவேல், பொதுநல மருத்துவர், அரசு தலைமை மருத்துவமனை விருதுநகர், மரு.ஆர்.ஜி.சந்திரமௌலி, பொது அறுவை சிகிச்சை மருத்துவர், அரசு மருத்துவமனை அருப்புக்கோட்டை, மரு.பி.பிரேமலதா, மகப்பேறு மருத்துவர், அரசு தொழிலாளர் நல ஈட்டுறுதி மருத்துவமனை சிவகாசி, மரு.என்.தர்மராஜன், மருத்துவர், அரசு தொழிலாளர் நல ஈட்டுறுதி மருந்தகம் சிவகாசி, மரு.டி.உமாதேவி, மருத்துவர், அரசு தலைமை மருத்துவமனை விருதுநகர், மரு.பா.ஆரோக்கியரூபன்ராஜ், மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செங்குன்றாபுரம், மரு.எஸ்.செந்தில்குமார், மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ம.ரெட்டியபட்டி, மரு.சி.ஜெயராமன், மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குன்னூர், மரு.வி.பேச்சியம்மாள், மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தளவாய்புரம் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,  சந்தித்து  வாழ்த்துப் பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து