முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி ஆதரவு அளித்திருப்பதால் சேலம் எட்டு வழிச்சாலை இனி சூப்பர் சாலையாகவே அமையும்: அமைச்சர் உதயகுமார்

திங்கட்கிழமை, 16 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு அளித்திருப்பதால், சேலம்-சென்னை எட்டு வழி பசுமைச் சாலை இனி சூப்பர் சாலையாகவே அமையும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை போன்ற பெரிய திட்டங்கள் வர வேண்டும். அப்படி வந்தால்தான் நாடு வளர்ச்சியடைய முடியும். இத்தகைய திட்டங்களை நிறைவேற்றும்போது தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால், சிலருக்கு பாதிப்பு ஏற்படும். அவர்கள் மனம் மகிழ்ச்சியடையும் அளவுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். முடிந்தவரை விவசாய விளைநிலங்கள் பாதிக்காத அளவுக்கு செய்தால் மிகவும் நல்லது” என கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து