எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டூர் : டி.ஆர்.பாலு மத்திய அமைச்சராக இருந்தபோது தேசிய நெடுஞ்சாலைக்கு 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படவே இல்லையா ? என்று மேட்டூரில் பாசனத்திற்காக அணையை திறந்த பின் நிருபர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி கேள்வி தி.மு.க.வுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை தண்ணீரை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர். திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையை திறந்த பின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: எட்டுவழிச் சாலைக்காக மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியிருப்பது பற்றி...
பதில்: யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் ஊடக நண்பர்களும், தொலைக்காட்சி நண்பர்களும் ஒரு சில இடத்தில் செய்வதை வைத்து, பெரிதாக பூதாகரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இன்றைக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் நில அளவுப் பணி நடைபெற்று முடிந்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். பசுமைவழிச் சாலைக்கு தேவையான நிலத்தை, நில உரிமையாளர்களிடமிருந்து, எல்லைக்கல் போடப்பட்டுள்ளதாக தகவல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நில உரிமையாளர்கள் முன்வந்து, எங்களுக்கு நிலம் எடுப்பதனால் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கின்றார்கள். ஒருசிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, நில உரிமையாளர்கள் பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பதனால், அந்தக் கட்சியைச் சார்ந்தவர்களை வைத்து தொலைக்காட்சி படம் எடுப்பது, பத்திரிகையிலே போடுவது, இதற்கென்று ஒரு கூட்டம் இருக்கின்றது. வளர்ச்சிப் பணியை இவர்கள் ஆதரிப்பதே கிடையாது. இந்த அரசை எதிர்க்க வேண்டும், இந்த அரசு கொண்டு வருகின்ற வளர்ச்சிப் பணியை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்கடைய நோக்கம்.
தி.மு.க. ஆட்சியில் பாதிக்கவில்லையா?
பசுமை வழிச்சாலை திட்டத்தில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்? அவசரம் இல்லை, அவசரம் என்ற பிரச்சினையே கிடையாது. அந்த நிதியை குறிப்பிட்ட காலத்தில் வாங்கிக் கொள்ளவேண்டும். ஏனென்றால், எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள், இரண்டாவது திட்டமாக இந்த பசுமை வழிச்சாலை திட்டம் இந்தியாவில் வருகிறது. பல்வேறு மாநிலங்கள் எங்களுக்கு கொடுங்கள், எங்களுக்கு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். மத்திய அரசை நாங்கள் கேட்டவுடனேயே கொடுத்தார்கள். ஆகவே, அந்த வாய்ப்பை நல்லமுறையிலே பயன்படுத்த வேண்டியது அரசினுடைய கடமை. இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம், மற்ற எதிர்க்கட்சியெல்லாம் சொல்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தில் டி.ஆர்.பாலு தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார்.
3005 ஹெக்டேர் நிலங்கள்...
அப்பொழுது, தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைக்கு 17 சாலைகள் எடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 3005 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்பொழுதெல்லாம் விவசாயிகள் பாதிக்கவில்லையா? அப்பொழுது தமிழகத்தினுடைய வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 7 லட்சம், இன்றைய தினம் 2 கோடியே 57 லட்சம். இந்தத் திட்டம் நிறைவு பெறுவதற்கு இன்னும் ஐந்தாண்டு காலம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலே 14 லட்சம் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, 2.57 லட்சம் இருக்கின்றது. ஐந்தாண்டு காலம் நிறைவுபெறுகின்றபொழுது, 70 லட்சம் வாகனங்கள் அதிகரிக்கும். ஆக மொத்தம், 3.27 லட்சம் வாகனங்கள் உயர்ந்து விடும். எனவே, அதற்குத் தேவையான சாலை வசதி தேவை. இவர்களுடைய காலத்தில் சாலை போட்டால், மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா ? நிலம் எடுத்தால் பாதிக்கப்படமாட்டார்களா ?
60 கிலோ மீட்டர் ...
ஆனால், இன்றைக்கு அம்மாவினுடைய அரசு, மத்தியிலிருந்து போராடி, வாதாடி, நிதி உதவி பெற்று இந்த சாலையை அமைக்கின்றது. இந்த சாலையை அமைப்பதின் மூலமாக சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு 60 கிலோ மீட்டர் குறைவாகிறது. பயண நேரம் குறைகிறது. இதனால் தொழில்வளம் பெருகும். இன்னும் பல்வேறு தொழிற்சாலைகள் நம்முடைய பகுதிக்கு கொண்டு வந்து, படித்து, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டியது அரசினுடைய கடமை. இப்படிப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இருந்தால்தான் புதிய, புதிய தொழிற்சாலைகள் வரும். அதற்காகத்தான் இந்தத் திட்டத்தை அம்மாவினுடைய அரசு கொண்டு வந்திருக்கிறது.
கேள்வி: கிட்டத்தட்ட 2.50 கோடி வாகனங்கள் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதில் 2 கோடி வாகனங்கள் இரண்டு சக்கர வாகனங்கள் தானே ?
பதில்: தவறு. 2006-ம் ஆண்டிலிருந்து 2010-ம் ஆண்டு வரை உளுந்தூர்பேட்டை, கிருஷ்ணகிரி சாலை என இரண்டு சாலை இருந்தது. அப்பொழுது கனரக வாகனம் 17 லட்சம்தான் இருந்தது. இன்றைய தினம் 23 லட்சம் கனரக வாகனங்கள் உயர்ந்து 40 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் அதிகமாவதால், உயிரிழப்புகள் அதிகமாகிறது. இந்த சாலையை பொறுத்தவரைக்கும், நவீன, தொழில்நுட்பத்துடன் கூடிய சாலை. மற்ற சாலையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். விபத்துக்கள் குறைக்கப்படுகிறது. விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றுவது அரசின் கடமை.
இழப்பீட்டுத் தொகை...
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சில் நில எடுப்பிற்கான இழப்பீட்டுத் தொகை குறைவாகக் கொடுத்தார்கள். இன்று அம்மாவினுடைய ஆட்சிக் காலத்தில், நிலத்தின் வழிகாட்டு மதிப்பை 66 சதவிகிதம் உயர்த்தி விட்டோம். அதற்குமேல் கூடுதலாகக் கொடுக்கின்றோம். அதுமட்டுமல்ல, அவர்களுடைய நிலங்களிலிருக்கின்ற தென்னை மரங்களின் வயதிற்கு ஏற்றவாறு, சுமார் ரூபாய் 50 ஆயிரம் வரைக்கும் விவசாயிகளுக்கு கிடைக்கின்றது. ஒவ்வொரு விவசாயிக்கும், அவர்கள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு, வீடுகளுக்கு, பாசனக் கிணறுகளுக்கு, ஆழ்துளைக் கிணறுகளுக்கு, மாட்டுக் கொட்டகை, தக்க இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். எந்தவகையிலும் நம்முடைய விவசாயப் பெருங்குடி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அரசு கண்ணும், கருத்துமாக இருந்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவின் அடிப்படையில் கணக்கீடு பணி செய்து, இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்படும்.
விவசாயம், பொருளாதார...
அதுமட்டுமல்ல, கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களின் நிலம் கையகப்படுத்தும் போது, உடனடியாக அந்தப் பகுதி மக்களுக்கு வீட்டு மனை கொடுத்து, வீடுகளும் கட்டித்தரப்படும். இன்றைக்கு சேலம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அதற்கு பட்டா கொடுத்துள்ளார்கள். அரசைப் பொறுத்தவரைக்கும், மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது, அதே நேரத்தில், நம்முடைய தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். விவசாயம், பொருளாதார வளர்ச்சி இரண்டையும் அம்மாவினுடைய அரசு கவனமாக பார்த்துக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
2-ம்கட்ட வாக்குப்பதிவு: இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
25 Apr 2024புதுடெல்லி, இன்று 2-ம்கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு இறுதிக்கட்ட பணகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.