முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கனமழை - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அடுத்த 24 மணி நேரத்திற்கு நாடு முழுவதும் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. வட மாநிலங்கள் மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. ஏற்கனவே கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒடிசா மற்றும் தெற்கு சத்தீஸ்கரில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேற்குவங்கம், சிக்கிம், ஒடிசாவின் கடலோர பகுதிகள், உ.பி., அரியானா, சண்டிகர், டில்லி, பஞ்சாப், காஷ்மீர், கிழக்கு ராஜஸ்தான். குஜராத், கோவா, மத்திய மகராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மலையோர பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்க்கும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல் கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து