முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கூடுதலாக ரூ. 100 கோடி நிதியுதவி - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : மழை வெள்ளத்தால்  கடுமையாக பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உடனடியாக ரூ. 100 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார். வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட பின் அவர் இவ்வாறு அறிவித்தார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிடுகிறது. இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று  ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மத்திய அமைச்சர் அல்போன்ஸ், முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். அப்போது வெள்ளம் பாதித்த இடங்களையும், சேத விவரங்களையும் அவர்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
வெள்ள பகுதிகளை பார்வையிட்ட பிறகு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உடனடியாக கூடுதலாக ரூ. 100 கோடி நிவாரண நிதி வழங்கப்படும். மழை வெள்ள சேதங்களை மதிப்பிடுவதற்கு சில காலமாகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக கேரளாவுக்கு கூடுதலாக ரூ. 100 கோடி வழங்கப்படும். கேரளாவுக்கு ஏற்கனவே ரூ. 80 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து