முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உதவி: அரசு ஊழியர்கள் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, கேரள மாநிலத்தில் மழை வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து கொள்ள வேண்டுமென அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத்தலைவர் சண்முகராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்., தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக கேரள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களும் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை நிவாரணநிதி வழங்க உரிய ஆணை வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கப்பட்ட மூத்த சங்கம் என்ற முறையில் கேட்டுக்கொள்வதாக சண்முகராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து