முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலஸ்தீனத்துக்கு அளிப்பதாக அறிவித்த நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

 காசா,பாலஸ்தீனத்துக்கு அளிப்பதாக அறிவித்த நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

 இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா பகுதிகளில் நிர்வாகம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்த அமெரிக்கா அளிப்பதாக இருந்த நிதியுதவியை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்பு கொண்டு கூறினார் என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அறிவித்தார்.

டிரம்பின் இந்த முடிவை பாலஸ்தீனம் மற்றும் அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன.

எதிர்ப்பை சற்றும் பொருட்படுத்தாமல் அமெரிக்கா தனது முடிவிலிருந்து பின்வாங்க மறுத்து விட்டது.

இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனம் - அமெரிக்கா இடையே உறவு முற்றிலுமாக சிதைந்தது.

இந்த நிலையில் பாலஸ்தீனத்துக்கு அளிப்பதாக அறிவித்த நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து