முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாக்காவில் ஹெல்மெட் அணியாதோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதிப்பு

வியாழக்கிழமை, 6 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

டாக்கா,வங்கதேச தலைநகர் டாக்காவில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

இது குறித்து டாக்கா பெருநகர காவல்துறை ஆணையர் அசாதுஜமான் மியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருவோருக்கு பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டாம் என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமர்வோரும் தலையில் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றார் அவர்.

தெற்காசிய நாடுகளில் மிகவும் மோசமான சாலைகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக வங்கதேசம் கருதப்படுகிறது. அந்நாட்டில் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 12,000 பேர் உயிரிழப்பதாக ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து