முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறுகிறது:தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புவனேஸ்வர்,வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1-ம் எண் கூண்டு...கிழக்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறுகிறது.  இதன் காரணமாக வட தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.  மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாலும் சீரற்ற வானிலை நிலவுவதாலும் சென்னை, கடலூர், நாகை, பாம்பன், காரைக்கால் மற்றும் புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு ...புயல் சின்னம் காரணமாக தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. எனவே அந்தமான், தெற்கு வங்கக்கடல், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் ஒடிசா ஆந்திரா மாநிலங்களில் புயல் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உருவாகி உள்ள புயல் மந்தநிலையில் காணப்படுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்திற்குள் தீவிரமடையக்கூடும். இந்த புயலானது ஆந்திராவின் கலிங்கபட்டணம் பகுதியில் 310 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் 300 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதன்காரணமாக காற்றின் வேகம் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீச கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து