முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் எம்.பி. புகார் எதிரொலி எச். ராஜா மீது வழக்குப் பதிவு

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறை மற்றும் நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீசார் ஏற்கனவே பல்வேறு முக்கியப் பிரிவுகளில் பா.ஜ.க. தேசிய செயலர் ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைக் கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதே போல எச். ராஜா மீது திருவண்ணாமலையிலும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் கடலூர் அ.தி.மு.க. எம்.பி. அருண்மொழித்தேவன், கோவில் நிலத்தை அபகரிப்பு செய்ததாக  எச். ராஜா தெரிவித்திருந்தனர். அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அருண்மொழி தேவன் எம்.பி. கோவில் நிலத்தை ஆக்கிரமித்தேன் என்று எச். ராஜா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுவேன் என்றும், காவல்துறை அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்றும் இல்லையெனில் நான் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பேன் என்றும் அருண்மொழித்தேவன் எம்.பி. கூறியிருந்தார். இதையடுத்து எச். ராஜா மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் எம்.பி. புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரை ஏற்று போலீசார் எச். ராஜா மீது  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து