முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதநேய பண்பாளர் டி.ஒச்சாத்தேவரின் 6 வது ஆண்டு நினைவு தினம்

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மனிதநேய பண்பாளர் டி.ஒச்சாத்தேவரின் 6வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டியிலுள்ள விகேஜி மஹாலில் புகழாஞ்சலி விழா நேற்று நடைபெற்றது.இதில் மூவேந்தர் முன்னேற்ற கழக மாநில மகளிரணி செயலாளரும், ஓஎஸ்எம்ஆர் டிரஸ்ட் நிறுவனத் தலைவருமான திருமதி. ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் அவர்கள் கலந்து கொண்டு தலைமையேற்று தனது ஓஎஸ்எம்ஆர் டிரஸ்ட் சார்பில் ஏழை எளிய மக்கள் 5ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் அன்னதானம் வழங்கினார்.
மனிதநேய பண்பாளர் டி.ஒச்சாத்தேவர் அவர்களின் 6வது ஆண்டு நினைவுதினம் உசிலம்பட்டியில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.இதையொட்டி மூ.மு.க.மாநில மகளிரணி செயலாளர் திருமதி.ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் அவர்களின் தலைமையில் ஓஎஸ்எம்ஆர் டிரஸ்ட் சார்பில் உசிலம்பட்டி நகரிலுள்ள விகேஜி மஹாலில் நாளை காலை மனிதநேய பண்பாளர் டி.ஒச்சாத்தேவர் அவர்களின் நினைவு புகழாஞ்சலி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இதன் முதல் நிகழ்ச்சியாக ஏழை,எளிய மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனிதநேய பண்பாளர் டி.ஒச்சாத்தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும்,வீரணவக்கம் செலுத்தியும் மரியாதை செய்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து 6வது ஆண்டு நினைவுதின புகழாஞ்சலி விழாவில் ஓஎஸ்எம்ஆர் டிரஸ்ட் சார்பில் 2ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள்,பார்வையற்றோர் 100பேருக்கு ஊன்றுகோல்கள், 50பேருக்கு தையல் இயந்திரங்கள்,50பேருக்கு இஸ்திரிபெட்டிகள், 2ஆயிரம் தாய்மார்க ளுக்கு சேலைகள்,20பேருக்கு 3சக்கர வண்டிகள்,மாற்றுத்திறனாளிகள் 5பேருக்கு   சக்கரநாற்காலிகள் இவற்றுடன் உசிலம்பட்டியிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் வசதிக்கென இரும்பிலானான மேற்கூரை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுடன் 5ஆயிரம் பேருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சியும் வெகு சிறப்புடன் நடைபெற்றது.இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் மூமு.க மாநில மகளிரணி செயலாளரும், ஓஎஸ்எம்ஆர் டிரஸ்ட் நிறுவனத் தலைவருமான திருமதி. ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர்,தொழிலதிபர் ஒ.ராகேஷ்ஒச்சாத்தேவர்,டாக்டர். ஒ.மோனிகா,டாக்டர். எ.செல்வகுமார் ஆகியோர் முன்னின்று பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.இவ்விழாவில் மூ.மு.க மாநில இணைதலைவர் ஆறுமுகநாட்டார்,துணை பொதுச் செயலாளர் ராஜா,மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம்,கள்ளர்முரசு ஆசிரியர் தியாகராஜன் ஆகியோர் புகழாஞ்சலி செலுத்தி உரையாற்றினார்கள்.
மனிதநேய பண்பாளர் டி.ஒச்சாத்தேவர் அவர்களின் 6வது ஆண்டு நினைவுதின புகழாஞ்சலி விழா நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கிடும் நிகழச்சிகளுக்கான அனைத்து  ஏற்பாடுகளையும் மூ.மு.க.மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஓஎஸ்எம்ஆர் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் திருமதி.ஒ.சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தலைமையில் மூவேந்தர் முன்னேற்ற கழக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சிவரக்கோட்டை வி.செல்வம், திருமங்கலம் தொகுதி செயலாளர் தென்னமநல்லூர் செந்தில்,திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் குட்டி(எ)ஞானசீலன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவல்சூரன்பட்டி ஈஸ்வரன்,மதுரை ஏ.சி.தென்னரசு, ஆவல்சூரன்பட்டி ஈஸ்வரன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் எஸ்.பிச்சை,உசிலம்பட்டி நகர செயலாளர் எஸ்.பி.சுதர்,நிர்வாகிகள் எஸ்.பி.நத்தம் நிறைகுளம்,நேசநேரி ராமராஜ்,சிவரக்கோட்டை முத்துவேல்,புளியம்பட்டி வெங்கடேஷ் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து