முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் இன்னும் எத்தனை நாட் களுக்கு உயிருடன் இருப்பேனோ தெரியவில்லை கர்நாடக முதல்வர் குமாரசாமி உருக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,இன்னும் எத்தனை நாட்களுக்கு நான் உயிருடன் இருப்பேனோ தெரிய வில்லை. உயிரோடு இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்வேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி மேடையில் கண்ணீர் மல்க தெரி வித்தார்.

கர்நாடக மாநிலம் மண்டியாவில் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் குமாரசாமி பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாலும், கடவுளின் ஆசியாலும் மீண்டும் முதல்வராகி இருக்கிறேன். நான் பணம் சம்பாதிப்பதற்காக முதல்வராக இருக்கவில்லை. என்னிடம் நிறைய சொத்து இருப்பதால் பணம் தேவையில்லை. மக்களை சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். மக்களின் அன்பு, பாசம் கிடைத்தாலே எனக்கு போதும்.என்னை நேசிக்கும் மக்களுக்கு துரோகம் செய்தால் நான் உயிரோடு இருந்தாலும் இறந்தது மாதிரி தான். எனக்கு இதய நோய் இருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

நான் இன்னும் எத்தனை நாட் களுக்கு உயிருடன் இருப்பேனோ தெரியவில்லை. (கண்ணீர் விட்டு அழுதார்). உயிருடன் இருக்கும் வரை மக்களுக்கு சேவை செய்வேன். கடந்த ஆண்டு இஸ்ரேல் சென்றிருந்த போதே நெஞ்சு வலியால் நான் இறந்திருக்க வேண்டும். ஆனால் மருத்துவச் சிகிச்சையால் உயிரோடு திரும்பி வந்தேன்.கடந்த 24-ம் தேதி கூட எனக்கு திடீரென உடல்நலிவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன். ஆனால் எதற்காக மருத்துவமனைக்குச் சென்றேன் என்று கூற மாட்டேன். நான் முதல்வராக இருக்கும் வரை கர்நாடகாவில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தையும் காப்பாற்ற விரும்புகிறேன். மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து, அவசரகதியில் ஆட்சி நடத்த மாட்டேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து