முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்,லண்டனில் புகழ்பெற்ற சுவாமிநாராயன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள்தீபாவளியன்று கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் வில்லஸ்டேன் லேன் பகுதியில் புகழ்பெற்ற சுவாமிநாராயன் கோயில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கிலாந்தின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரியகற்கோயிலாகவும் சுவாமிநாராயன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், தீபாவளிப்பண்டிகை கொண்டாட்டம் முடிந்து கோயில் திறக்கும் போது, அங்குள்ள 50 ஆண்டு பழமைவாய்ந்த கிருஷ்ணர் சிலைகளைக் காணாதது கண்டு கோயில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமிராவை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.ஸ்காட்லாந்து யார்டு போலீசார் வெளியிட்ட அறிவிப்பில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1.50 மணிக்கு சுவாமிநாராயன் கோயிலில் கொள்ளை நடந்துவிட்டதாகப் புகார் வந்தது. உடனடியாக அதிகாரிகள் கோயிலுக்குச் சென்று ஆய்வு நடத்தினார்கள். கோயிலில் சிலைகள் மட்டுமின்றி, பணம், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம் எனத் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து