முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் கடற்கரையில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 பேர் மாயம்

வியாழக்கிழமை, 6 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஜப்பானில் 2 அமெரிக்க ராணுவ விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் மாயமாகினர்.

போர் விமானங்கள்...

ஜப்பான் கடற்கரையில் உள்ள எண்ணைய் நிரப்பும் நிலையத்துக்கு சென்று எண்ணைய் நிரப்பிக் கொண்டு புறப்பட்ட அமெரிக்க போர் விமானங்களான எப்-18 ஃபைட்டர், சி -130 டேங்கர் ஆகிய இரண்டும் விபத்துக்குள்ளாகின. ஜப்பான் கடற்கரையில் சுமார் 200 மைல் தொலைவில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக ஜப்பானில் உள்ள அமெரிக்க கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

6 பேர் மாயம்

அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த விபத்துச் சம்பவம் பற்றி கூறியதாவது:- “ தெற்கு ஜப்பானின் ல்வாகுனி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானங்கள் விபத்துக்குள்ளாகின. சி -130 போர் விமானம் 5 பேருடனும், எப்-18 விமானம் இரண்டு பேருடனும் சென்றது. இதில், ஒரு விமானி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். ஏனைய 6 பேரின் நிலைமை குறித்து தகவல் எதுவும் இல்லை. அவர்களை மீட்கும் பணியில், ஜப்பான் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து