முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோ பெண் கவர்னர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி: பதவியேற்ற 10-வது நாளில் துயரம்!

செவ்வாய்க்கிழமை, 25 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

பியூப்லா, மெக்சிகோ நாட்டின் பெண் ஆளுநர் மார்த்தா எரிக்கா அலோன்சா ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகியுள்ளார். பதவியேற்ற 10-வது நாளில் இந்த துயர முடிவை அவர் சந்தித்துள்ளார்.

பியூப்லா மாகாணத்தின் ஆளுநராக கடந்த டிசம்பர் 14-ம் தேதிதான் எரிக்கா பதவியேற்றிருந்தார். இந்த நிலையில் அவரும், அவரது கணவரும் ஹெலிகாப்டரில் பயணித்த போது அது கீழே விழுந்து நொறுங்கி எரிந்து சாம்பலானது. இதில் எரிக்காவும், அவரது கணவர் ரபேல் மொரினோ வல்லேவும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

45 வயதான எரிக்காவின் திடீர் மரணம் மெக்சிகோவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணம் குறித்து மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது விபத்தா அல்லது சதியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பான விரிவான விசாரணைக்கு அதிபர் ஆண்டிரஸ் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பைலட் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து