முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. அரசு சி.பி.ஐ.யை துஷ்பிரயோகம் செய்கிறது -மம்தா பானர்ஜி கண்டனம்

சனிக்கிழமை, 12 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : அலோக் வர்மா ராஜினாமா குறித்து பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு சி.பி.ஐ.யை துஷ்பிரயோகம் செய்கிறது என கண்டனம் தெரிவித்தார். 

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு தீர்ப்பளித்தால், அவர் மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நியமனக்குழு ஆலோசனை கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்க முடிவானது. மேலும், அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். 

இதற்கிடையே, மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அலோக் வர்மா ராஜினாமா குறித்து பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு சி.பி.ஐ.யை துஷ்பிரயோகம் செய்கிறது என கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, மம்தா வெளியிட்டுள்ள செய்தியில், மத்தியில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க. அரசு சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளை சீர்குலைத்து வருகின்றன. தனது அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக சி.பி.ஐ. அமைப்பை பா.ஜ.க அரசு துஷ்பிரயோகம் செய்து வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து